வெந்தயம்

வெந்த+அயம்*

அயம் என்றால் இரும்பு*

உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது வெந்தயம்*

சூடா  வெந்தய டீ குடிச்சா என்னென்ன #நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.

எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.

அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.

அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.

சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும்

வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள்  செய்திருப்பீர்கள்.

வெந்தயத்தேநீரை  குடித்திருக்கிறீர்களா?

அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும்,

அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில்  வெந்தயத்தை சிறிது சேர்த்து,

மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,

தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :

குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நச்சுக்களை உடலில் தங்க விடாது.

 

ரத்த சோகை போக்க :

இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.

மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு இந்த  வெந்தய  டீ அருமருந்தாகிறது.

மாதவிடாய் வலிக்கு :

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும்.

அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும்.

இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

டீன் ஏஜ் பெண்கள் :

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது.

இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் அதிகரிக்க :

முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.

தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.