பிணிகள் போக்கும் பூக்கள்

 

 

 

வெள்ளெருக்கம் பூ: இதனுடன் மிளகு,  கிராம்பு சம அளவு சேர்த்து நன்றாக அரைத்து மிளகளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்த வேண்டும்.

இந்த மாத்திரையை ஆஸ்துமா,  காசநோயாளிகள் உட்கொண்டால் கடுமையான இரைப்பு,  மூச்சு வாங்குதல் முதலான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

ஆவாரம் பூ:  சிறுநீரகப் பிரச்சனைகளைப் போக்கும்.  நீர்த்தாரை எரிச்சலை நீக்கும்.

இதை அரைத்து பற்றுப் போட்டால் முகப்பருக்கள் மறையும்.

மலைவேம்புப் பூ:  இதை அரைத்துத் தடவினால் சாதாரண புண்கள்,  குழிப்புண்கள்,  சிலந்திப் புண்கள்,  மேகப் புண்கள், புற்றுப் புண்களை ஆற்றும்.

விலவப் பூ:  இதனுடன் வேப்பம் ப10வையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உட்கொண்டால் உள்காய்ச்சல் ஓடிவிடும்.

இந்தப் பூவுடன்,  துளசி இலையையும் சேர்த்து அரைத்து உண்டால் மலேரியா மாயமாகும்.

புங்கம் பூ:  இதை நெய்யில் பொன்நிறமாக வறுத்து,  தூள்செய்து காலை மாலை உண்டுவந்தால் அடம்பிடித்துத் தங்கியிருக்கும் மேக நோய்கள்,  கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கிப் போகும்.

 

வேளைப் பூ:  இந்தப் பூச்சாற்றைத் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தைகளுக்குப் புகட்டினால் காய்ச்சல், ஜலதோசம் சளி, கண்சூடு,  மந்தம் ஆகியவை அகலும்.

விளாம் பூ: இந்தப் பூச்சாற்றுடன் தேன் சேர்த்து உண்டால் குடல் சார்ந்த நோய்கள் நீங்கும்.

விளாம்பூ சர்பத் அதிக உமிழ் நீர் சுரப்பதைத் தடுக்கும்.  தொண்டைப் புண்ணை ஆற்றும்.

கல்லீர்ல் இயக்கத்தைச் சீராக்கி மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும்.

ஊமத்தன் பூ:  இதனுடன் இலையையும் வதக்கி ஒத்தடம் கொடுத்தால் வாதவலி விலகும், வீக்கங்கள் வடியும்.

சிற்றகத்திப் பூ:  இதை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி தீரும்.

தைலம் காய்ச்சி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்தால் மூக்கடைப்பு,  பீனிசம்,  ஜலதோசம் முதலான தலைசார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

வெட்சிப் பூ:  நாவறட்சி,  அதிதாகம்,  நீர்ச்சுருக்கு முதலான பிரச்சனைகள் விலக இந்தப் பூவை அரைத்து மோருடன் பருக வேண்டும்.  ஆட்டுப்பாலில் கலந்து குடித்தால் வெள்ளை,  வெட்டை விலகி தேகம் நலமாகும்.

நுணாப் பூ:  கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கத்தில் இதன் கஷாயத்தை இளஞ்சூடாக விட்டுக் கழுவி வந்தால் வீக்கம் வடிந்துவிடும்.

தேள்கொடுக்குப் பூ:  காச நோயை முற்றிலும் குணமாக்க இந்தப் பூவுடன் தேள்கொடுக்கு இலையும், கொஞ்சம் மிளகு, கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவில் ஆட்டுப் பாலுடன் நாள் ஒன்றுக்கு ஒருவேளை மட்டும் ஒரு நாள் விட்டு ஒருநாள் இருபது நாட்கள் சாப்பிட்டால் காசநோயின் பிடி முற்றிலும் தளர்ந்து விடும்.  ஊடல் நலம் மனநலத்தை மேம்படுத்தும்.

உத்தாமணிப் பூ: இதனுடன் இலையையும் சமஅளவு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குடற்புழுக்கள் வெளியேறும்.

சுவாசக் காசர்தையும், வாதக் கோளாறுகளையும் அற்புதமாகக் குணமாக்கும்.

நெய்சட்டிப் பூ:  இதன் சாற்றை தாய்ப்பாலில் கலந்து கண்களில் விட்டுக் கொண்டால் கண்நோய்கள் நீங்கும்.

‘படைத்த படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தான் தலைவணங்க’

என்ற சத்தியச் சொற்களைக்கருத்தில் கொண்டு மலர்களின் மருத்துவப் பயன்களையும் அறிந்து பயன்படுத்திப் பலனடைந்து,  படைப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வை அனுதினமும் தொழுது,  துதித்து நன்றி காட்டுவதைக் காண்பது அவனது விருப்பமாகும்.  அதை நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

 

மருத்துவர். G.S.T. மஹ்பூப் சுப்ஹானி