அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வரலாறு

முன்னுரை وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். (அல்குர்ஆன் : 92:17) الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌‏ (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய…

 மீலாது: இன்றும் இனியும் !

நவீன வஹ்ஹாபிகளின் வருகைகளுக்குப் பிறகு மீலாது விழாக்கள் சற்று வீழ்ச்சிகண்டன. மீலாது மேடைகள் இனி மீளாது என்று சொல்லும் அளவுக்கு அவை கீழே தள்ளப்பட்டன. எனினும் அவை…

மாநபி (ஸல்) அவர்கள் பிறந்த வசந்த காலமும் !!! இப்லீஸ்களின் கசந்த காலமும் !!!!!

  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவதரித்த ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் சில அற்பப் பதர்கள் ஓலமிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகின்றன. குறிப்பாக…

அண்ணலாரும் அறிவியலும் – தொடர் 1

இறைவன் தன் அடியார்களுக்கு 4 விதமான வேதங்களை தன்னுடைய நபிமார்களுக்கு அனுப்பி வைத்து போதிக்கச் செய்தான். இந்த வேதங்கள் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் எதில் திளைத்திருந்தார்களோ அதன்…

அரசியலின் அரிச்சுவடி அண்ணல் நபி (ஸல்)

  அரசியல் ஒரு சாக்கடை என்பது வழக்குமொழி. இன்றைய அரசியல்வா(வியா)திகள் நீதி,நேர்மை, நாணயமற்றவர்களாகவும் ஊழல், இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுபவர்களாகவும், கேவலமான குணங்கள்; உடையவர்களாகவும் இருப்பதால் இந்த உவமானம்…

ஜன்னதுல் பகீஃ

ஜன்னதுல் பகீஃ

ஜன்னதுல் பகீஃ     عن عائشة أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول…

அழகிய கடன் கொடுப்போம்!

அழகிய கடன் கொடுப்போம்! இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு…

*ஈகோ* என்றால் என்ன?

     *ஈகோ* என்றால் என்ன?   ஈகோ என்பது என்ன? தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின்…

படேல் சிலையும் மோ(ச)டி அரசியலும் ( கடைசிப் பக்கம் )

உலகிலேயே மிகப்பெரிய சிலை இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு ஒற்றுமையின் சிலை எனப்பெயரிடப்பட்டு ரூ.3000/= கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிலை செய்யாமல் சீனாவில் செய்யப்பட்டு…

பொறுப்புணர்ந்து பேசுவோம்

சமீப நாட்களாக பொதுவெளியில் பேசுகிற பொறுப்புமிக்கவர்களின் பேச்சு சமூகத்தில் சர்ச்சைகளையும்,அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை ஊடகத்தின்வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம்.   ஆளும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர்துரைக்கண்ணு அவர்கள் தஞ்சையில் பேசிய பொதுக்கூட்டம்ஒன்றில் “ஆளும் அதிமுக அரசை குறை கூறினால் நாக்கைஅறுப்போம்” என்று சூளுரைக்கின்றார்.   ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கண்டனஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிகின்றது.   நடந்த கலவரத்தில் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறியதெலுங்கு தேச கட்சியைச்சார்ந்த எம். பி திவாகர் ரெட்டி என்பவர்விமர்சனத்தின் உச்சமாக “காவல் துறையினர் திருநங்கைகள்போல் ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள்” என்று ஊடகத்திற்கு பேட்டிகொடுக்கின்றார்.   இதற்கு, பதில் கொடுக்கும் முகமாக ஆந்திர மாநிலம்அனந்தபுரமு மாவட்டத்தில் கதிரி காவல் நிலையத்தில்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மாதவ் என்கிற அதிகாரி“போலீஸை தவறாக பேசும் எம். பி, எம். எல். ஏ க்களின் நாக்கைஅறுப்பேன்” என்று ஊடகத்தை கூட்டி வைத்து எச்சரிக்கின்றார்.   மதக்கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகஹைகோர்ட்டின் ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு மேடைபோட்டு பேச அனுமதி மறுத்த திருமயம் காவல்துறைஅதிகாரிகளை தேசிய கட்சி ஒன்றின் தேசிய செயலாளரான எச்.ராஜா ஒருமையில் பேசியதோடு “ஹைகோர்ட்டாவது மயிராவது…”என்று ஏக வசனம் பேசுகின்றார்.   கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் திருவாடானை தொகுதிஎம். எல். ஏ, கருணாஸ் என்பவர் காவல்துறை மேலதிகாரிஅரவிந்தன் என்பவரைக் குறித்து விமர்சிக்கும் போது“காக்கிச்சட்டையை கழற்றிப் போட்டு விட்டு நேருக்கு நேர் வந்துபார், நீயா? நானா? என்று ஒரு கை பார்க்கலாம்” என்றுகொக்கரிக்கின்றார்.   சட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர்கள்,காவல்துறை உயரதிகாரி, ஒரு கட்சியின் தேசிய செயலாளர்என்று மக்களோடு சார்ந்திருக்கும் துறைகளில் பொறுப்பு வகிக்கும்முக்கியமான நபர்கள் பொதுவெளியில் இப்படி தடித்தவார்த்தைகளை வெளிப்படுத்தினால் சாமானியனும், பாமரனும்தங்களின் கோபத்தை, உணர்ச்சிப்பிழம்பை இதை விட பன்மடங்குவெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகி நாட்டில் அசாதாரண சூழல்உருவாகி விடும் என்பது மறுப்பதற்கில்லை.   சாதாரணமானவர்களே இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்த யோசிக்கும் வேளையில் சட்டம்தெரிந்தவர்களும், படித்தவர்களும், அதிகார வரம்பு உள்ளவர்களும்பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது எவ்வகையில்நியாயம்? என்று வெகுஜன மக்கள் வெகுவாகப்பேசிக்கொள்கின்றார்கள்.   வாருங்கள்! பொதுவாகவே, பொறுப்பு வகிக்கும்பொறுப்புதாரிகள் பொதுவெளியிலும் சரி, வாழ்வின் இதரபகுதிகளிலும் சரி வார்த்தைகளை எவ்வாறு வடிவமைத்துக்கொள்ள வேண்டும்? பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும்?என்பதை இஸ்லாம் கூறும் வழிகாட்டு முறையில் பார்த்துவிட்டுவருவோம்!!  …