நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா…?

மௌலவி அல் ஹாஃபிழ் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil

ன்று இஸ்லாமிய சமுதாயத்தில் மிகுதமாக காணப்படும் ஒரு பழக்கம்(?) என்னவெனில்ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நிகழ்ந்து விட்டால்அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு(!!!) அலைபேசி மூலம் பேசிப் பழகுவதாகும். அப்படி அவர்கள் இருவரும் பேசாமலேயே திருமணம் வரை வந்து விட்டால்அதை ஒரு சிலர் ஒரு பெரிய உலக அதிசயமாக கருதுகின்றனர். இன்னும் ஒரு சாராரோஅப்படிப் பேசாமல் இருப்பது ஒரு பெரிய குற்றம் என்றும்அவ்வாறு இருப்பதால் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடும் என்றும் வாதிடுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்களுடைய கருத்துப்படி நிச்சயிக்கப்பட்ட இருவரும் நேரடியாகப் பேசிப் பழகிஅவர்கள் இருவருக்குமிடையே ஒரு இணக்கமும்அன்னியோன்யமும் ஏற்படாத வரையில் திருமணம் செய்வதில் அர்த்தமேயில்லை என அருமையான முறையில் விளக்கவுரை தருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நிச்சயித்த பெண்ணுடன் பேசுவதும்பழகுவதும் இஸ்லாமியப் பார்வையில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகின்றோம். ஏனெனில் கோவணம் கட்டிய ஊரில் வேட்டி கட்டுபவன் பைத்தியக்காரன் என்னும் ஒரு சொலவடை உண்டு. அதனடிப்படையில் இந்த பிரச்சனையை அணுக வேண்டி உள்ளதால் இஸ்லாமிய அளவுகோல் கொண்டு இதைப் பார்ப்பதே நமது நோக்கமாகும்.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான்  இவர்கள் இருவரையும் இணைக்கும்  பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை‘ எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின்  தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்‘ என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், ‘உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?’ என்று  கேட்டார்கள். அவர் அதற்கு, ‘என்னிடம் எதுவுமில்லை‘ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!‘ என்று சொன்னார்கள். அவர், ‘என்னிடம் ஏதுமில்லை‘ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ”சரி! குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர் அதற்கு, ‘இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது‘ என்று  கூறினார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்‘ என்று  சொன்னார்கள். ஆதாரம்: புகாரி.

திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள் என்பதை மேற்காணும் நபிமொழி தெளிவாக விளக்குகிறது.  மேலும் ஆணுடைய காதலுக்கும்இ அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் அவன் முறையாக திருமணம் செய்த மனைவிதான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன‘.   அல்குர்ஆன் (30 : 21).

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அல்லது நிச்சயதார்த்தமே முடிந்திருந்தாலும்அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண்தான். ஒரு அந்நியப் பெண்ணிடம்இ நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். நிச்சயம் செய்ததின் காரணமாக அவள் நமது மனைவி ஆகி விட்டாள் என்று பொருளல்ல.

மேலும் அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்;. ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத)  நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) ஆதாரம்: முஸ்லிம்

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம்இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக  கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணம் நிச்சயமாகிவிட்டதை என்பதை அவர்கள் (லைசென்ஸாக) அனுமதிச் சீட்டாக பயன்படுத்தி ஆபாசப் பேச்சுகள் பேசுவதற்கு சாதகங்கள் உள்ளது என்ற கருத்தை நாம் மறுக்க இயலாது.

தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் மேலும் பெருமானார் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்:விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்லகண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறதுஇச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது  பொய்யாக்குகிறது‘.    நூல் : புகாரி.

நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றன. மேலும் திருமண தினத்தன்று கூட நின்றுபோன பல திருமணங்கள் குறித்தும் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக தொலைபேசியில் பேசும்போது ஏற்பட்ட சில வாக்குவாதங்களால் திருமணம் நின்று போன பல கதைகளையும் அனுதினமும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

அப்படி திருமணம் நடக்காமல் போன தருணங்களில்சம்பந்தப்பட்ட ஆணையும்  பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக்இ குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே  கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே  கணவன்மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக்காரணமhகும்.

அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்றே கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதாஎன நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கிப் பழகுவதற்கும் அவளிடம் போனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதாஎன்பதையும் பார்க்க வேண்டும்.

நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால்இ திருமணத்திற்குப் பின் எப்படி இருப்பாள்என்ற விமர்சனமும் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவதும் பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த பிரச்சனைகளைக் களைய எளிதான வழிநிச்சயதார்த்தற்கும் திருமணத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளி விடாமல் இருப்பதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார்‘ என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை ஒரு பெரிய விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க  வேண்டியிருக்கின்றது. அந்த இடைவெளி இதுபோன்ற அனாச்சாரங்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.

இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது. இது போன்ற இழிவான பழக்க வழக்கங்களும் இஸ்லாமிய சமுதாயத்தில் நிலவாது என்பது திண்ணம்.